பொய்யான வழக்கு... வாய்மையே வெல்லும்
பொய்யான வழக்கு... வாய்மையே வெல்லும்!
*வாடிக்கையாளர் கேள்வி*
வாடிக்கையாளர் பெயர்: விஜய சந்தர், வயது 59,
அரசு மருத்துவமனையில் ஒரு உயர் பதவியில் இருக்கிறார். தனது தலைமையின் கீழ் வேலை செய்யும் ஒரு திருமணமான மத்திம வயது உடைய பெண்ணால் தவறான வழக்கு புனையப்பட்டு துறை ரீதியான விசாரணை நடக்க இருக்கும் நிலையில் நாளை தீர்ப்பு அவருக்கு சாதகமாக வருமா?
பின்குறிப்பு:- இவர் தவறு செய்ததற்கான சிசி டிவி ஆதாரமோ செல்போன் உரையாடல்களோ ஏதுமில்லை. இருந்தாலும் அவர் இப்பொழுது மிகுந்த மன உளைச்சலில் இருக்கிறார். தவிரவும் அந்தப் பெண்ணின் மேல் இரண்டு வருடத்திற்கு முன் ஒரு போர்ஜரி வழக்கு நடந்து துறை ரீதியான தண்டனையில் அந்தப் பெண் இருந்திருக்கிறார்.
*அவருக்காக போடப்பட்ட பிரசன்னம் இது.*
.
சரி. விஷயத்திற்கு வருவோம்.
*முடிவு என்ன?*
*தீர்ப்பு தனக்கு சாதகமாக இருக்குமா? என்பது தான் வாடிக்கையாளரின் கேள்வி.*
*பிரசன்னம் தரும் பதில்* 👇
கேள்வியாளர் கடக உதயம் என்பதால் ,அதன் அதிபதி சந்திரன் உதயத்துக்கு
9 ஆம் வீடான மீனத்தில் பாக்கியஸ்தானத்தில் அமர்ந்து பலம் பெற்று விட்டார்.
அத்தோடு *ஒன்பதாம் அதிபதி குரு பகவான் உதயத்தை நோக்கி வருவதால் வழக்கு முடிவுக்கு வந்து கேள்வியாளருக்கு சாதகமான தீர்ப்பாக அமையும். சுபமான நிகழ்வாக தீர்ப்பு வந்து வேதனைப்பட்ட அவருக்கு மனமகிழ்ச்சியைத் தரும் என்பதைச் சுட்டிக்காட்டுகிறது.*
எதிராளி என்று சொல்லக்கூடிய நபர் ஏழாம் வீட்டுக்கு அதிபதியாவார்.
கடகத்துக்கு ஏழாம் வீடு என்பது மகர மனையாகும்.
அந்த இடத்தை எதிராளியாகக் கொண்டு பார்க்கும் போது மகர மனையின் அதிபதி *சனி பகவான் தன்மனைக்கு நான்கில் மேஷத்தில் நீசமாக இருக்கிறார்.*
எனவே பிரசன்னத்தின் மூலம் பார்க்கும்போது எதிராளி வலுவிழந்து இருக்கிறார் என்று காட்டுகிறது.
எதிராளி என்று சொல்லக்கூடிய சனி பகவான் நீசமானதால் *வழக்கு தொடர்ந்த பெண்மணிக்கு சாதகமாக தீர்ப்பு வராது என்பது உறுதிப்படுத்துகிறது.*
வழக்கு தொடுத்த எதிராளி தோல்வியடைவார் என்பதையும் பிரசன்னம் எடுத்துக்காட்டுகிறது.
*வழக்கு தோல்வியைச் சந்திக்கும்.*
*****************************
*நடந்தது என்ன?*👇
இன்று 22/3/2024 வெள்ளிக்கிழமை
*மருத்துவ அதிகாரி அவர்களுக்கு சாதகமாக தீர்ப்பு வந்தது.*
பொய் வழக்கு தொடர்ந்த குற்றம் சாட்டிய பெண்மணியிடம் போதிய ஆதாரங்கள் இல்லை
. ஆனால் மருத்துவ அதிகாரி அவர்களிடம் தன் மேல் குற்றமில்லை என்று நிரூபிக்கக்கூடிய ஆவணங்களையும், அந்தப் பெண் ஏற்கனவே போர்ஜரி செய்ததற்கான ஆவணங்களையும் சமர்ப்பித்து இருக்கிறார்.
*இதைப் பார்த்த விசாரணை அதிகாரி மருத்துவ அதிகாரி மேல் ஒரு குற்றமும் இல்லை என்று தீர்ப்பளித்து விட்டார்.*
*
உதயத்தை நோக்கி ஒன்பதாம் அதிபதி குரு பகவான். ஆகவே முடிவு சுபமாகவே இருந்தது.
எட்டாம் அதிபதி சனி பகவான் நீசம். வழக்கு ஒன்றும் இல்லாமல் ஆகிவிட்டது.
கவிப்பு கவித்த கிரகம் புதன். இந்த வழக்கில் ஆவணங்களே பேசியது. எதிர் தரப்பிடம் சுத்தமாக ஆவணங்களோ ஆதாரங்களோ இல்லை.
ஆனால் மருத்துவ அதிகாரி தன்னை குற்றமற்றவர் என்பதை நிரூபிக்கத்தக்க ஆவணங்களையும் ஆதாரங்களையும் வைத்திருந்தார்.
கேள்வியாளருக்கு சாதகமான தீர்ப்பாக அமைந்தது. சுபமான நிகழ்வாக தீர்ப்பு வந்து வேதனைப்பட்ட அவருக்கு மனமகிழ்ச்சியைத் தந்தது .
நடந்த நடக்கப் போகின்ற நிகழ்வை மிகத் துல்லியமாக அளிக்கும் ஜாமக்கோள் பிரசன்னம் வாழ்க!
*கிரகங்களின் மாயாஜாலம்!!*
*ஜாமக்கோளின் வண்ணக்கோலம்!!*
*எண்ணக் கோலம்!!*
*........ஜாலம் தொடரும்*
🙏🙏🙏


Comments
Post a Comment