பிரசன்னம் வெற்றி பெறுமா? என்பதை எப்படி அறிந்து கொள்வது?
ஒரு பிரசன்னம் வெற்றி பெறுமா? என்பதை எப்படி அறிந்து கொள்வது?✌ பொதுவாக ஒரு பிரசன்னத்திற்கு பதில் கூறும்போது பிரசன்னம் வெற்றிபெறும் என்பதை எப்படி நாம் தீர்மானிக்கிறோம் அது நமக்கு சாதகமான பதிலைத்தான் தருகிறதா அல்லது பாதகமான பதிலை தர இருக்கிறதா என்பதை அறிந்து கொள்ளக்கூடிய கோல்டன் ரூலை எங்கே நாம் கவனிக்க வேண்டியதாக இருக்கிறது என்பது முக்கியமாகும். அதாவது உதயத்தில் ஆருடத்தில் உதயாதிபதியோ ஆருடாதிபதியோ கேட்கப்பட்ட கேள்வியின் பாவம் மற்றும் அந்த பாவத்தின் அதிபதி கவிப்பில் இல்லாமல் இருந்தால் அந்தக் கேள்விக்கு பிரசன்னம் நமக்கு சாதகமான பதிலைத் தரும் என்பது உறுதி என்பது தெளிவாகிறது. அதேபோல ஒரு கேள்வி நேரடியாக கேட்கப்படும் போது கவிப்பை நாம் பெரிதாக பார்க்க வேண்டியதில்லை . அதனிடம் உள்ள ரகசியம் மட்டும் என்னவென்று தெரிந்து கொண்டால் போதும் அதைக் கொண்டு நாம் நிலவரத்தை அறிந்து கொள்ளலாம். அதே சமயம் பதில் என்ன எதிர்காலத்தில் நடக்க இருக்கிறது என்பதை முதலில்உதயத்தை நோக்கி வரக்கூடிய கோளை வைத்து அது சுபகோளாக இருந்தால் அதாவது குரு, சுக்கிரன், வளர்பிறை சந்திரன் ஆக இருப்பின் முடிவு சுகமாக நல்ல...