Posts

Showing posts from July, 2023

ஜாமக்கோள் பிரசன்னம் பாடம் 2

Image
  *Lesson2* *ஜாம கிரகங்களின் பெயர்கள்* ஜாம கிரகங்கள் மொத்தம் எட்டு. அவற்றின் பெயர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன. கதிர் - சூரியன் சேய் - செவ்வாய் பொன் - குரு மால் - புதன் புகர் - சுக்கிரன் மந்தன் - சனி மதி - சந்திரன் பாம்பு - ராகு கேது ஜாமங்கள் மொத்தம் எட்டு ஒரு ஜாமம் என்பது ஒன்றை மணி நேரமாகும். ஒரு நாளில் 24 மணி நேரத்தை இரண்டு பொழுதாக பகல் இரவு என பிரிக்கப்பட்டு பகலுக்கு 8 ஜாமங்களாகவும் இரவுக்கு  8 ஜாமங்களாகவும்  பிரிக்கப்படுகிறது. சூரிய உதயம் காலை 6 மணி என கொண்டால் அதே வேளையில் இருந்து ஜாமம் துவங்கும். முதல் ஜாமம் காலை 6:00 மணி முதல் 7:30 மணி வரை நடைபெறும். இரண்டாவது ஜாமம் காலை ஏழரை மணி முதல் 9 மணி வரை நடைபெறும். மூன்றாவது ஜாமம் 9 மணி முதல் 10 30 மணி வரை நடைபெறும். இவ்வாறாக பகல் வேளையில் எட்டு ஜாமங்களாக மாலை 6 மணி வரை நடக்கும். பின்னர் மீண்டும் மாலைப் பொழுதிலிருந்து மறுநாள் அதிகாலை 6:00 மணி வரை 8 ஜாமங்கள் நடைபெறும். .......ஜாலம் தொடரும் 

காணாமல் போனவர் பற்றிய பிரசன்னம்

Image
 குருவே சரணம் காணாமல் போனவர் பற்றிய பிரசன்னம் 7.12.2012 அன்று மதியம் 12.36 மணியளவில் போடப்பட்ட பிரசன்னம் எனது மருமகள் ஸ்ரீலேகா நேற்று இரவு 7 மணி முதல் காணவில்லை (லெட்டர் எழுதி வைத்துவிட்டு சென்று விட்டார்) அவர் எங்கு உள்ளார் திரும்பி வருவாரா என மாமியார் கேட்கிறார் அவருக்காக போடப்பட்ட ஜாமக்கோள் பிரசன்னம் உதயம் விழுந்த இடம் மிதுனம்  உதயாதிபதி புதன் ஆட்சியாக உள்ளார். உதயத்தில் இருந்து ஆரூடம் 6ம் இடம். விருச்சிகம் ராசி.  வீட்டில் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக (சண்டை) வீட்டைவிட்டு சென்றுள்ளார் என்பது பொருத்தமாக உள்ளது. கவிப்பு 8ம் பாவகத்தில்.மகர ராசியில். இது காணாமல் போன பிரசன்னம் என்பதை தெளிவாகக் கூறுகிறது. 2ம் இடத்தின் அதிபதி சந்திரன் கவிப்பில் மாட்டியுள்ளார்.  குடும்ப தகராறு ஏற்பட்டு உள்ளது. மனசஞ்சலம் அடைந்து இவ்வாறான முடிவு எடுத்ததை காட்டுகிறது உதயம் கெடவில்லை.  உதயாதிபதி புதன் உதயத்தை தொடுகிறார். ஆரூடம் கெடவில்லை. ஆரூட அதிபதி செவ்வாய் 4ம் இடத்தை தொடர்பு கொள்கிறார்.தாய்வீட்டுக்கு செல்வார் அல்லது சகோதரன் வீட்டுக்கு செல்வார் என்று பிரசன்னம் கூறுகிறது 4ம் இடத்தில...

ஜாமக்கோள் பிரசன்னத்தின் 3 ஹீரோக்கள்

Image
 ஜாமக்கோள் பிரசன்னத்தின் 3 ஹீரோக்கள் இருக்கிறார்கள்.  ஒருவர் உதயம்.  இரண்டாவது நபர் ஆருடம்.  மூன்றாவது ....அவர் ஹீரோ என்று சொல்ல முடியாது. ஆனால் அவர் இல்லாமல் எதுவும் செய்ய முடியாது. ஏன் கதையே இருக்காது. அவர்தான் கவிப்பு.  கால ஓட்டத்தை கர்மாவை நிர்ணயம் செய்யக் கூடியவர் கவிப்பு. கவிப்பு என்பது ஒரு நிகழ்வின் பாதிப்பை தாக்கத்தை சேதாரத்தை நஷ்டத்தை வெளிப்படுத்தக் கூடியவர்.  கவிப்பு எந்த பாவகத்தில் உள்ளதோ அந்த பாவம் நசிக்கப்படும்.  கிட்டத்தட்ட கிரகணம் பிடித்த நிலை என்று சொல்லலாம். கிரகணத்தில் சிக்கிய பாவமும் கிரகமும்  செயலிழந்து போகும். ஜாதகத்தில் பாதகாதிபதி என்ன வேலையைச் செய்வார் என்றால் மரணத்திற்கு ஒப்பான கண்டத்தை துன்பத்தை ஏற்படுத்துவார். ஆனால் மரணம் இருக்காது.  10 பாதகாதிபதி சேர்ந்தால் ஒரு கேது  ஆவார். 10 கேது சேர்ந்தால்  ஒரு  அஷ்டமாதிபதி ஆவார் . பத்து அட்டமாதிபதி சேர்ந்து இயங்கினால் ஒரு ராகு ஆகும். 10 ராகு சேர்ந்தால் ஒருகவிப்பு ஆகும். மேற்கண்ட அனைவருமே தங்களது திசா காலகட்டத்தில் திசையை நடத்தும் போது கொடுமையான துன்பகரமான நிகழ்வைய...